October 6, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

முகமாலையில் மீட்கப்பட்ட மனித எலும்புக்கூட்டு எச்சங்களை நீதவான் பார்வையிட்டார்!

கிளிநொச்சி முகமாலை பகுதியில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கையின் போது மீட்கப்பட்ட மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் மற்றும் ஆயுதங்கள் உள்ளிட்ட பொருட்களை கிளிநொச்சி நீதவான் பார்வையிட்டார்.

கடந்த 12 ஆம் திகதி, குறித்தப் பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் அங்கு, தமிழீழ விடுதலைப்புலிகளுடையது என சந்தேகிக்கப்படும் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் மற்றும் பழைய ஆயுதங்களை மீட்டுள்ளனர்.

இது தொடர்பில் பளை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனை தொடர்ந்து பளை பொலிஸாரால் கிளிநொச்சி நீதிமன்றத்தின் கவனத்திற்கு குறித்த விடயம் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்றைய தினம் அந்தப் பிரதேசத்திற்கு சென்ற நீதவான் எஸ்.லெனின் குமார் எலும்புக்கூட்டு எச்சங்களையும், மீட்கப்பட்ட ஆயுதங்களையும் பார்வையிட்டார்.