June 2, 2025 15:27:30

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழ். துன்னாலையில் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறியது!

யாழ்ப்பாணம், துன்னாலை பகுதியில் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறியதால் ஒருவர் காயமடைந்துள்ளார்.

கொழும்புப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக கடமையாற்றும் ஒருவரின் வீட்டிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வழமை போன்று இன்றைய தினம் காலையில் விரிவுரையாளரின் மனைவி உணவு தயாரிப்பில் ஈடுபட்டிருந்த போது ,எரிவாயு அடுப்பு வெடித்து சிதறியதுள்ளதாக கூறப்படுகின்றது.

இதன்போது வெடித்து சிதறிய அடுப்பின் பாகம் ஒன்று விரிவுரையாளரின் மனைவியின் தலையில் பட்டதில் அவர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புதிய எரிவாயு சிலிண்டரை நேற்றைய தினமே பொருத்தியிருந்ததாக அவர்கள் கூறுகின்றனர்.

கடந்த ஒரு மாத காலமாக நாட்டில் தொடர்ச்சியாக எரிவாயு வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.