October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வடமராட்சியைச் சேர்ந்த மூவருக்கு கொரோனா தொற்று உறுதியானது; சத்தியமூர்த்தி

பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த இருவருக்கும், கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“குறித்த மூன்று தொற்றாளர்களும் பேலியகொடை மீன் சந்தைக்குச் சென்று வந்தவர்கள். தற்போது தனிமைப்படுத்தலில் இருப்பவர்கள்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 243 பேருக்கான கொரோனா தொற்றுக்கான பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், குறித்த மூவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள அதேவேளை, ஏனையவர்களுக்கு தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டது என்று த.சத்தியமூர்த்தி மேலும் தெரிவித்தார்.