June 15, 2025 20:29:08

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மூதூர் கட்டுப் பகுதியில் வெடிப்புச் சம்பவம்: 15 வயது சிறுவன் உயிரிழப்பு!

திருகோணமலை மாவட்டத்தின் மூதூர், இக்பால் நகர் காட்டுப் பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இக்பால் நகர் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுவன் ஒருவரே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆட்டுக்கு குழை வெட்டுவதற்காக குறித்த காட்டுப் பகுதிக்கு சிறுவன் சென்றிருந்த போது அங்கிருந்த வெடிபொருளொன்று வெடித்துள்ளதாக கூறப்படுகின்றது.

இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.