June 17, 2025 20:13:36

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அமெரிக்காவுடனான உடன்படிக்கைகளை பகிரங்கப்படுத்துங்கள்;அனுரகுமார திஸாநாயக்க

அமெரிக்காவுடன் எட்டப்பட்ட இணக்கப்பாடு தொடர்பான விபரங்களை அரசாங்கம் பகிரங்கப்படுத்தவேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.)  தலைவர் அனுரகுமார திஸாநாயக்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அமெரிக்கா முன்வைத்த யோசனைகள் குறித்தும் இலங்கை அரசாங்கம் எவற்றை ஏற்றுக்கொண்டது என்பது குறித்தும் மக்களுக்கு அரசாங்கம் பகிரங்கப்படுத்தவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர் “இன்று அமெரிக்க இராஜாங்க செயலாளருடன் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கைகள் என்ன என்பதை நாட்டுக்கு பகிரங்கப்படுத்தவேண்டும்.உடன்படிக்கைகள் ஆட்சியாளர்களின் தனிப்பட்ட சொத்துக்கள் இல்லை.இந்த உடன்படிக்கைகள் நாட்டின் இறைமையுடன், அதன் எதிர்காலம், அதன் சொத்துக்களுடன் தொடர்புபட்டவை.

இந்து சமுத்திரத்தை ஆதிக்கம் செய்யும் நடவடிக்கைகளில் இலங்கையை இணைத்துக்கொள்வதே அமெரிக்காவின் நோக்கம்.இலங்கையை எந்த சர்வதேச இராணுவ அமைப்புடனும் இணைக்ககூடாது என அனுரகுமார திஸாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.