July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவுக்கு 5 உறுப்பினர்கள் நியமனம்

இலங்கையின் தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவுக்கு 5 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

2016 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க தகவலறியும் உரிமைக்கான சட்டத்தின் 12 (1)ஆம் சரத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய, ஜனாதிபதி இந்த நியமனங்களை மேற்கொண்டுள்ளார்.

5 உறுப்பினர்களைக் கொண்ட ஆணைக்குழுவுக்கு ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் உபாலி அபேரத்ன தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சட்டத்தரணி ஜகத் லியன ஆரச்சி, கிரிஷாலி பின்டோ ஜயவர்தன, ஓய்வுபெற்ற நீதியரசர் பீ. ரோஹினி வல்கம மற்றும் கலாநிதி அதுலசிறி குமார சமரகோன் ஆகியோர் ஆணைக்குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.