July 2, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

போரா சமூகத்தின் தலைவர் உட்பட பிரதிநிதிகள் ஜனாதிபதியை சந்தித்தனர்

போரா சமூகத்தின் ஆன்மீகத் தலைவர் கலாநிதி செய்யதினா முஃபத்தல் செய்ஃபுத்தீன் சஹெப், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவை சந்தித்துள்ளார்.

மிரிஹானையில் அமைந்துள்ள ஜனாதிபதியின் இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

சுமார் ஒரு மில்லியன் போரா சமூகத்தின் உறுப்பினர்கள் இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், கனடா, இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளில் வசிக்கின்றனர்.

இந்நிலையில், தான் மிகவும் நேசிக்கின்ற இலங்கைக்கு வந்ததையிட்டு மகிழ்ச்சியடைவதோடு, எதிர்காலத்திலும் தமது சீடர்களுடன் இந்நாட்டுக்கு வருகைதர எதிர்பார்த்திருப்பதாகவும் செய்ஃபுத்தீன் சஹெப் ஜனாதிபதியிடம் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டு வரும் கொவிட் தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்கு அவர் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் செய்கடமை கொவிட் நிதியத்துக்கு போரா சமூகம் வழங்கிய உதவிக்கு ஜனாதிபதி நன்றி தெரிவித்துள்ளார்.

முதலீடுகள் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு, இந்நாட்டின் பொருளாதாரத்துக்கு போரா சமூகத்தினர் வழங்கும் ஒத்துழைப்புகளுக்கும் ஜனாதிபதி பாராட்டுத் தெரிவித்துள்ளார்.