July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கண்டியில் விடுதலைப் புலி ஆதரவு என சந்தேகிக்கும் நிகழ்வுக்கு நீதிமன்றம் தடை உத்தரவு

விடுதலைப் புலி ஆதரவாளர்கள் என சந்தேகிக்கும் குழுவினர் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வொன்றுக்கு கண்டி பொலிஸார் தடை உத்தரவு பெற்றுள்ளனர்.

கண்டி முல்கம்பொல பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நடைபெற இருந்த நிகழ்வுக்கே பொலிஸார் இவ்வாறு நீதிமன்ற தடை உத்தரவு பெற்றுள்ளனர்.

விடுதலைப் புலி ஆதரவாளர்களே இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளனர் என்று கண்டி பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சிறைக் கைதிகளை மனிதாபிமானத்துடன் நடத்துவோம் என்ற கருப்பொருளில் நடைபெற இருந்த கௌரவிப்பு நிகழ்வே இவ்வாறு தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

சிறைகளில் உள்ள அரசியல் கைதிகளின் குடும்பத்தினர், விடுதலை பெற்ற முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் மற்றும் காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் கௌரவிக்கப்பட இருந்தனர்.