May 13, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 157 வாக்குகளால் நிறைவேறியது!

இலங்கை அரசாங்கத்தின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 93 மேலதிக வாக்குகளால் நிறைவேறியுள்ளது.

பாராளுமன்றத்தில் இன்று மாலை இடம்பெற்ற வரவு செலவுத் திட்டத்தின் மீதான இறுதி வாக்கெடுப்பில், 157 பேர் ஆதரவாகவும், 64 பேர் எதிராகவும் வாக்களித்துள்ளனர்.

நிதி அமைச்சரான பஸில் ராஜபக்‌ஷவினால் நவம்பர் 12 ஆம் திகதி வரவு செலவுத்  திட்டம் சபையில் சமர்பிக்கப்பட்டது.

அதன் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 22 ஆம் திகதி நடத்தப்பட்டது. அதன்போது 153 வாக்குகளால் அது நிறைவேற்றப்பட்டது.

இதன்பின்னர், அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு மீதான விவாதம் நம்பர் 23 ஆம் திகதி முதல் இன்று வரை நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து இன்று மாலை வரவு செலவுத் திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதில் அரசாங்க தரப்பினரும் எதிரணியில் சிலருமாக 157 பேர் வரவு செலவுத் திட்டத்தை ஆதரித்து வாக்களித்ததுடன், ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 64 பேர் எதிர்த்து வாக்களித்தனர்.

இதன்படி, 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 93 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவித்தார்.

வரவு செலவுத் திட்டத்துக்கான வாக்களிப்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான விஜயதாஸ ராஜபக்‌ஷ மற்றும் குமார வெல்கம ஆகியோர் கலந்துகொள்ளவில்லை.