July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பலில் ஏறுவதற்கு எனக்கு பைத்தியம் இல்லை”; ரணில் விக்ரமசிங்க

twitter/ranil wickremesinghe

மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பலில் ஏறிக்கொள்வதற்கு தனக்கு பைத்தியம் இல்லை என முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவுக்கு பிரதமர் பதவி வழங்கப்படவுள்ளதாக கடந்த சில தினங்களாக வதந்திகள் பரவின.

குறித்த விடயம் உண்மையா என பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் அவரிடம் கேட்டுள்ளனர்.

இதற்கு பதிலளிக்கும் போதே ரணில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ரணில் விக்ரமசிங்கவை அரசாங்கத்துடன் இணைத்துக்கொண்டால், நாட்டின் பொருளாதாரத்தை மீளவும் கட்டியெழுப்ப முடியுமென்பது பலரது கருத்தாக இருக்கிறதென பாராளுமன்ற உறுப்பினர்கள் இதன்போது தெரிவித்துள்ளனர்.

இதுஇவ்வாறிருக்க, நாட்டில், தற்போது ஏற்பட்டுள்ள டொலர் பற்றாக்குறை, அடுத்த வருடம் ஜனவரி இறுதி வரையிலும் இருக்கும் எனவும் நாட்டின் பொருளாதாரமும் மிகவும் நெருக்கடியான நிலையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ள ரணில் விக்ரமசிங்க, அடுத்த வருடமும் மிகவும் நெருக்கடியான வருடமாக இருக்கும் எனவும் கூறியுள்ளார்.