July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொரோனா தொடர்பில் சுகாதார பரிசோதகர்கள் பொதுமக்களுக்கு எச்சரிக்கை

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் பொதுமக்கள் சுகாதார ஒழுங்குவிதிகளைப் பின்பற்றத் தவறினால், மீண்டும் கொரோனா பரவல் தீவிரமடையும் அபாயம் இருப்பதாக சுகாதார பரிசோதகர்கள் எச்சரித்துள்ளனர்.

நாட்டின் கொரோனா பரவல் நிலை குறித்து கருத்துத் தெரிவிக்கும் போது, சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பொதுமக்கள் சுகாதார ஒழுங்குவிதிகளைப் பின்பற்றுவதில் கவனயீனமாக இருப்பதைக் கண்டுகொள்ளக் கூடியதாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படுவதைவிட கொரோனா தொற்றியவர்கள் பதிவாகுவதாக சுகாதார பரிசோதகர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

பண்டிகைக் காலத்தில் மக்கள் சுகாதார ஒழுங்குவிதிகளைக் கடைபிடிக்க வேண்டும் என்று உபுல் ரோஹன கேட்டுக்கொண்டுள்ளார்.