![](https://i0.wp.com/tamilavani.com/wp-content/uploads/2021/09/light.jpg?fit=867%2C552&ssl=1)
இலங்கையில் இன்றும் (07) நாளையும் (08) மாலை 6.00 மணி முதல் இரவு 09.30 மணி வரை நாட்டின் பல பகுதிகளில் ஒரு மணிநேர மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் மூன்றாவது மின் உற்பத்தி அலகு முழுமையாக இயங்கும் வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படலாம் என அமைச்சின் பேச்சாளர் சுலக்ஷனா ஜயவர்தன தெரிவித்தார்.
எனினும் நாளை மாலைக்குள் இந்த அலகு முழுமையாக செயல்படுத்தப்படும் என்று நம்புவதாகவும் அவர் மேலும் கூறினார்.
இலங்கையின் பிரதான மின் விநியோக கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக கடந்த வாரம் நாடு முழுதும் மின் தடை ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.