July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சஜித் தரப்பினர் இரண்டாவது நாளாகவும் பாராளுமன்ற அமர்வை புறக்கணித்தனர்

ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் இரண்டாவது நாளாக இன்றைய தினமும் பாராளுமன்ற அமர்வை புறக்கணித்துள்ளனர்.

சபைக்குள் தமது பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வரையில் பாராளுமன்ற அமர்வை புறக்கணிப்பதற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி எம்.பிக்கள் தீர்மானம் எடுத்துள்ளனர்.

இதன்படி நேற்றைய தினம் சபை அமர்வில் கலந்துகொள்வதை தவிர்த்த அந்தக் கட்சியின் உறுப்பினர்கள் இன்றைய தினமும் அதில் கலந்துகொள்ளவில்லை.

வெள்ளிக்கிழமை நடைபெற்ற வரவு செலவுத் திட்டத்தின் பாதுகாப்பு அமைச்சுக்கான ஒதுக்கீடுகள் தொடர்பான விவாதத்தின் போது எதிர்க்கட்சி உறுப்பினர் மனுஷ நாணயக்காரவுக்கு உரையாற்றுவதற்காக மேலதிக நேரத்தை வழங்காமை தொடர்பில் சபையில் அமைதியின்மை ஏற்பட்டிருந்தது.

இதன்போது சபைக்குள் அமைதியின்மை ஏற்பட்ட நிலையில், மறுநாள் சனிக்கிழமை அது தொடர்பில் சர்ச்சை ஏற்பட்டது.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்திலும் இது தொடர்பாக இணக்கம் காணப்படாத நிலையில், அவர்கள் சபை நடவடிக்கைகளை புறக்கணிக்கத் தீர்மானித்துள்ளனர்.