July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘இந்திய அரசின் 10 ஆயிரம் வீட்டுத்திட்டம் அடுத்த மூன்று மாதங்களில் ஆரம்பிக்கப்படும்’

இந்திய அரசாங்கத்தின் 10 ஆயிரம் வீட்டுத்திட்டத்தை அடுத்த மூன்று மாதங்களுக்குள் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடனான நான்காயிரம் வீட்டுத்திட்டம் இந்த ஆண்டு இறுதிக்குள் முழுமையடையும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்திய வீட்டுத்திட்டம் பாரிய பிரச்சினையாக உள்ளது.இந்த திட்டத்தின் கீழ் வெறுமனே 699 வீடுகள் மட்டுமே மக்களுக்கு கையளிக்கப்பட்டுள்ளது.மின்சாரம், குடிநீர், வீதி வசதிகள் இருப்பதே முழுமையான வீட்டுத்திட்டமாகும்.வெறும் கட்டிடத்தை கட்டிவிட்டு வீட்டை கட்டிவிட்டோம் என் கூறுவது மிகப்பெரிய தவறாகும்.ஆனால் இந்தியா தனது அமைப்புகளின் மூலமாக அண்ணளவாக 3,300 வீடுகளை நிறைவு செய்துள்ளது எனவும் அவர்குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல் அடுத்த ஆண்டில் எமக்கு உள்ள நிதி ஒதுக்கீட்டில் கல்வி, சுகாதாரம் மற்றும் விளையாட்டுத்துறையை மேம்படுத்த பாரிய திட்டமிடல் ஒன்று இடம்பெறும்.ஸ்மார்ட் வகுப்புகளை உருவாக்கவும், பாடசலை புரனமைப்பு, வைத்தியசாலை புனரமைப்பு, தரிசு நிலங்களை குத்தகை முறையில் இளைஞர்களுக்கு வழங்கும் வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்றும் கூறியுள்ளார்.