July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழ்ப்பாணம் கடலில் மிதந்த கஞ்சா மூடைகள்

யாழ்ப்பாணம் – மாதகல் கடற்பரப்பில் 7 மூடைகளில் மிதந்த 275 கிலோ கஞ்சா கடற்படையினரால் மீட்கப்பட்டள்ளது.

இன்று காலை குறித்தக் கடற்பகுதியில் கடற்படையினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது இந்த கஞ்சா மூடைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இவை இந்தியாவில் இருந்து படகு மூலம் கடத்தி வரப்பட்டதாக இருக்கலாம் என்றும், கடற்படையினரை கண்டதும் அவற்றை கடத்தல்காரர்கள் கடலில் போட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகின்றது.

இவ்வாறு மீட்கப்பட்ட கஞ்சா மூடைகள் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு எடுத்து வரப்பட்டள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.