July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கிளிநொச்சியில் வெடிப்பு சம்பவம்: ஒருவர் மரணம்!

File Photo

கிளிநொச்சி, உமையாள்புரம் சோலை நகர் பகுதியில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவமொன்றில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளார்.

வெடிக்காத நிலையில் காணப்பட்ட எறிகணை குண்டொன்றை பழைய இரும்புக்காக  மின்சார இயந்திரத்தினால் வெட்ட முற்பட்ட போதே இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வீட்டிற்குள் வைத்து அதனை மின்சார இயந்திரத்தினால் வெட்டியுள்ளதாகவும், இதன்போது அது வெடித்துச் சிதறியதால் 25 வயதுடைய இளைஞன் உயிரிழந்துள்ளதுடன், அவரின் 13 வயதுடைய சகோதரன் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெடிப்பு சம்பவம் இடம்பெற்ற வீட்டை சூழவுள்ள சில பகுதிகளில் ஆபத்தான வெடபொருட்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். .

சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.