July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மின்வெட்டு தொடர்பில் மின்சார சபை விடுத்துள்ள அறிவிப்பு!

Electricity Power Common Image

இலங்கையில் எந்தவொரு பிரதேசத்திலும் இன்று மின்சாரம் தடைப்படாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் 6 ஆம் மற்றும் 7 ஆம் திகதிகளில் சில பிரதேசங்களில் மின்சாரம் தடைப்படும் என மின்சார சபையின் பொது முகாமையாளர் எம்.ஆர். ரணதுங்க கூறியுள்ளார்.

எனினும் 7 ஆம் திகதிக்கு பின்னர் மின் விநியோகம் முழுமையாக வழமைக்கு திரும்பும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் பிரதான மின் விநியோக கட்டமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கடந்த 3 ஆம் திகதி நாடு முழுவதும் 6 மணித்தியாலங்கள் மின் விநியோகம் தடைப்பட்டது.

இதனை தொடர்ந்து இந்தப் பிரச்சனையை முழுமையாக தீர்க்கும் வரை தேவையின் அடிப்படையில் குறுகிய கால மின் விநியோக தடை ஏற்படக்கூடும் என இலங்கை மின்சார சபை அறிவித்திருந்தது.