July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

குறிஞ்சாக்கேணி படகுப்பாதை விபத்து; மற்றுமொரு பெண் உயிரிழப்பு

திருகோணமலை, கிண்ணியா குறிஞ்சாக்கேணி படகுப்பாதை விபத்துடன் தொடர்புடைய மற்றுமொரு பெண் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் 4 ஆம் திகதி இரவு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கிண்ணியா குறிஞ்சாக்கேணி பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய, மூன்று பிள்ளைகளின் தாயொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர்  23 ஆம் திகதி குறிஞ்சாக்கேணி படகுப்பாதை கவிழ்ந்ததில் நீரில் மூழ்கிய நிலையில் படுகாயமடைந்த குறித்த பெண் கிண்ணியா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலைக்கும் பின்னர் திருகோணமலையிலிருந்து கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கும் மேலதிக சிகிச்சைக்காக அனுப்பப்பட்டிருந்த நிலையில், அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிய வருகின்றது.

அந்த வகையில் கிண்ணியா குறிஞ்சாக்கேணி படகுப்பாதை விபத்தில் இதுவரை எட்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த பெண்ணின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக கிளிநொச்சி வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.