July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

30 மில்லியன் ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் மீட்பு!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 30 மில்லியன் ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து வந்த இலங்கை வர்த்தகர் ஒருவரின் பயணப் பொதியில் இருந்தே இந்த போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளதாக விமான நிலையத்தின் சுங்கப் பிரிவு தெரிவித்துள்ளது.

பால்மா பக்கட்டுகளுக்குள் மறைத்து வைத்து இந்த போதைப் பொருளை கொண்டு வந்துள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் பிரதி சுங்கப் பணிப்பாளர் சுதத்த சில்வா தெரிவித்துள்ளார்.

இவ்வாறாக 1.5 கிலோ கிராம் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரையும், போதைப்பொருளையும் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.