February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மின்தடையால் பல பிரதேசங்களில் நீர் விநியோகத்திற்கு பாதிப்பு!

இலங்கை முழுவதும் ஏற்பட்டுள்ள மின்தடை காரணமாக கொழும்பு உள்ளிட்ட பல பிரதேசங்களில் நீர்விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரதான மின்விநியோகக் கட்டமைப்பில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக இன்று முற்பகல் 11.40 மணி முதல் நாடு முழுவதும் மின்சாரம் தடைப்பட்டது.

தற்போது அதனை சீர்செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கட்டம் கட்டமாக சில இடங்களில் மின்விநியோகம் வழமைக்கு திரும்பி வருவதாகவும் இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் மின்சார தடை காரணமாக நீர்விநியோக நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.