July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘ஊடகங்களால் அரசாங்கங்களைக் கொண்டுவர முடிந்தாலும் பாதுகாக்க முடியாது’: பிரதமர் மகிந்த

ஊடகங்களால் அரசாங்கங்களைக் கொண்டுவர முடிந்தாலும், அரசாங்கங்களைப் பாதுகாக்க முடியாது என்று பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்களுக்கு அசிதிசி காப்புறுதி வழங்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே, பிரதமர் இதனைக் குறி;ப்பிட்டுள்ளார்.

அரசாங்கங்களுக்கு உள்ளே உள்ளவர்களால் மாத்திரமே அரசாங்கங்களைப் பாதுகாத்துக்கொள்ள முடியும் என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

ஊடகங்கள் அரசாங்கங்களைப் பாதுகாக்கச் சென்றால், ஊடகங்களுக்கு பெரிய காப்புறுதி வழங்க நேரிடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஊடகவியலாளர்களுக்கு விளங்காத விதத்தை நாட்டைத் திசை திருப்ப பல்வேறு சக்திகள் முயற்சிப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.