July 2, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பிரித்தானிய அமைச்சரை சந்தித்து பேசியது கூட்டமைப்பு!

பிரித்தானிய மாநில வெளிவிவகார பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி விவகார அமைச்சர் லோர்ட் தாரிக்கை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்து பேசியுள்ளனர்.

பிரித்தானியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ சுமந்திரனும், இரா.சாணக்கியனும் லோர்ட் தாரிக்கை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இதன்போது தமிழ் பேசும் மக்கள் மற்றும் சிறுபான்மையினரின் உரிமைகள் மீதான தற்போதைய அரசாங்கத்தின் தாக்குதல்கள் மற்றும் சிறுபான்மை மக்களுக்கு எதிரான அரசியலமைப்பு மற்றும் தற்போதைய சில சட்ட நடவடிக்கைகளை திருத்த வேண்டியதன் அவசியம் போன்ற பல விடயங்கள் குறித்தும் பேசப்பட்டுள்ளது.

இந்த இராஜதந்திர விஜயத்தின் நோக்கமானது தமிழ் மக்களின் பிரச்சனையை அடுத்த கட்டத்துக்கு நகர்த்துவதும், எமக்கான உரிமையினை மிக விரைவில் பெறக்கூடிய வழிமுறைகளை ஒருங்கமைத்தலுமாகும் என இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.