July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழ். வலிகாமம் கிழக்கு பிரதேச சபை உறுப்பினர் சடலமாக மீட்பு!

யாழ். வலிகாமம் கிழக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதேச சபை உறுப்பினர் சுப்பிரமணியம் சிவபாலன் இன்று (01) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவர் தங்கியிருந்த வீட்டில் இவரின் நடமாட்டமில்லாததை அவதானித்த அயல்வீட்டவர்கள் வீட்டை ஆராய்ந்த போது அங்கு துர்நாற்றம் வீசியுள்ளது.

இதையடுத்து அவர்கள் உடனடியாக சாவகச்சேரி பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.  சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் பிரதேச சபை உறுப்பினர் சுப்பிரமணியம் சிவபாலனின் சடலத்தை மீட்டுள்ளனர்.

51 வயதான சுப்பிரமணியம் சிவபாலன் சாவகச்சேரி தனங்கிளப்பு அறுகுவெளியில் உள்ள வீடு ஒன்றில் தனிமையில் வாழ்ந்து வந்ததாக அயலவர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இவரின் சடலத்திற்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதன் பின்னர் பிரேத பரிசோதனை நடத்தப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை  சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.