![](https://i0.wp.com/tamilavani.com/wp-content/uploads/2021/06/gas.jpg?fit=800%2C450&ssl=1)
இலங்கையில் சமையல் எரிவாயு காரணமாக ஏற்படும் விபத்துக்கள் அதிகரித்துள்ள நிலையில், இவ்வாறான சிக்கல்களை முறைப்பாடு அளிக்க 1311 என்ற அவசர இலக்கத்தை லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.
எரிவாயு கசிவு உள்ளிட்ட சிக்கல்கள் தொடர்பில் இந்த தொலைபேசி இலக்கத்துக்கு அழைத்து பொதுமக்கள் முறைப்பாடு அளிக்க முடியும் என எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தவிர லிட்ரோ எரிவாயு நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு சமையல் எரிவாயு பாதுகாப்பு தொடர்பில் புதிய வழிகாட்டுதல்களையும் வெளியிட்டுள்ளது.
புதிய வழிகாட்டல்களை இங்கே பார்வை இடமுடியும்
இந்நிலையில் எரிவாயு கசிவு தொடர்பான மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் நிபுணர் குழு அறிக்கை, நுகர்வோர் விவகார அமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஷாந்த வல்பொலகே தெரிவித்துள்ளார்.
இதனிடையே நாட்டில் இடம்பெற்று வரும் எரிவாயு விபத்துக்கள் தொடர்பான அறிக்கைகளை ஆராய்ந்து அதற்கான தீர்வுகளை முன்வைப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குழு ஒன்றை நியமித்துள்ளார்.