July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

எரிவாயு சிலிண்டர் வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் ஆராயுமாறு நுகர்வோர் அதிகார சபையிடம் முறைப்பாடு!

நாட்டில் இடம் பெற்ற எரிவாயு சிலிண்டர் வெடிப்பு சம்பவங்கள் தொடர்பிலும் எரிவாயு கலவை தொடர்பில் ஆராயுமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு நுகர்வோர் அதிகார சபையிடம் முறைப்பாடு ஒன்று பதிவு செய்துள்ளது.

மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜே. சி. அலவத்துவல, முஜுபுர் ரகுமான், ஹெக்டர் அப்புஹாமி, திலிப் வெதராச்சி, சுஜித் சஞ்சய பெரேரா உள்ளிட்ட பலர் இந்த முறைப்பாட்டை பதிவு செய்வதற்காக நுகர்வோர் அதிகார சபைக்கு இன்று (30) விஜயம் செய்திருந்தனர்.

இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ஜே. திரு. சி. அலவத்துவல, மக்களுக்கு சமையல் எரிவாயு விலை ஏற்றத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டிய சூழ்நிலையில் இந்த புதிய சர்ச்சையை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாக தெரிவித்தார்.

“நம் நாட்டில் 40% மக்கள் எரிவாயுவை பயன்படுத்துகின்றனர். இதனால் அந்த மக்கள் அனைவரும் இன்று பாதுகாப்பற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்” எனவும் அவர் கூறினார்.

தரமற்ற எரிவாயு சிலிண்டர்களை சந்தையில் இருந்து அகற்ற வேண்டும் என தமது குழுவினர் நுகர்வோர் அதிகார சபையிடம் கோரிக்கை விடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

தேசிய பாதுகாப்பை வழங்குவதாக பெருமையடித்துக் கொண்டு பதவிக்கு வந்த அரசாங்கங்களின் கீழ் இன்று சமையலறை, வேலைகளை மேற்கொள்ள மக்கள் அச்சப்படுகின்றனர். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கும்படி நுகர்வோர் அதிகார சபையை தாம் வலியுறுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.