![Social Media / Facebook Instagram Twitter Common Image](https://i0.wp.com/tamilavani.com/wp-content/uploads/2021/02/Social-Media-Whats-app-FB-Twitter.jpg?fit=1024%2C576&ssl=1)
இலங்கையில் பொலிஸாரை விமர்சிக்கும் 400 க்கு அதிகமான சமூக ஊடக கணக்குகள் தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாரை விமர்சிக்கும் பேஸ்புக் உட்பட பல்வேறு சமூக ஊடகக் கணக்குகள் இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான செயற்பாடுகளால் பொலிஸாரின் நற்பெயர் பாதிக்கப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நியாயமான காரணங்கள் இன்றி பொலிஸாரை விமர்சிப்பது கவலைக்குரிய விடயமாகும் என்று சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
பொலிஸாரை மோசமாக விமர்சிப்பவர்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு பொலிஸ்மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்.