![Electricity Power Common Image](https://i0.wp.com/tamilavani.com/wp-content/uploads/2021/02/Electricity-Tower.jpg?fit=1024%2C576&ssl=1)
இலங்கையின் தலைநகரம் உட்பட பல்வேறு பகுதிகளிலும் மின் தடை ஏற்பட்டுள்ளது.
கொத்மலை உப மின் நிலையத்தில் இருந்து பியகம உப மின் நிலையத்துக்கான மின் விநியோகத்தில் ஏற்பட்ட துண்டிப்பால் இந்த மின் தடை ஏற்பட்டுள்ளது.
மின் தடையை சீர்செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சாரசபை தெரிவித்துள்ளது.
இலங்கை மின்சாரசபையின் பொறியியலாளர்கள் சட்டத்திற்கு வேலை செய்யும் நடைமுறையைப் பின்பற்றி வரும் நிலையிலேயே இவ்வாறான மின் தடை ஏற்பட்டுள்ளது.