July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

படகுப்பாதை விபத்து: உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

கிண்ணியா, குறிஞ்சாக்கேணி படகுப்பாதை விபத்தில் காயமடைந்திருந்த 6 வயது சிறுமியொருவர் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.

இவர் திருகோணமலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன்படி குறித்த விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணக்கை 7 ஆக உயர்வடைந்துள்ளது.

கடந்த 23 ஆம் திகதி படகுப் பாதை கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நான்கு மாணவர்கள் உள்ளிட்ட 6 பேர் உயிரிழந்திருந்தனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து குறித்தப் படகுப்பாதையை நடத்திச் செல்வதற்கு அனுமதி வழங்கியதாக கூறப்படும் கிண்ணியா நகரசபை தவிசாளர், படகின் உரிமையாளர் மற்றும் படகை இயக்கியவர் உள்ளிட்ட நான்கு பேரை பொலிஸார் கைது செய்துள்ளளனர்.

இதேவேளை விபத்து சம்பவத்தை தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை முதல் அந்தப் பகுதியில் கடற்படையினரால் படகுச் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.