June 14, 2025 10:03:14

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஊடகவியலாளர் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து முல்லைத்தீவில் கண்டன போராட்டம்

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் நேற்று ஊடகவியலாளர் விஸ்வலிங்கம் விஸ்வச்சந்திரன் தாக்கப்பட்ட சம்பவத்தினை கண்டித்து இன்று முல்லைத்தீவில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் வடமாகாணத்தின் பல்வேறு ஊடக அமைப்புக்களின் பிரதிநிதிகள், அரசியல் பிரமுகர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் ஆகியோர் ஒன்றிணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

ஊடகவியலாளர் மீதான தொடர்ச்சியான அச்சுறுத்தல்கள் தாக்குதல்கள் சித்திரவதைகளை உடனடியாக நிறுத்த வேண்டுமெனவும் ஊடக சுதந்திரம் நிலைநாட்டப்பட வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் வலியுறுத்தியுள்ளனர்.

குறித்த போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச சபை தவிசாளர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும் சமூக செயற்பாட்டாளர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.