July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வடக்கு, கிழக்கு அரசியல்வாதிகள் நினைவேந்தல் அனுஷ்டிப்பு

நீதிமன்றங்களின் கட்டளைகளையும் ,இராணுவம்,பொலிஸாரின் தடைகளையும் மீறி வடக்கு,கிழக்கில் தமிழ் அரசியல்வாதிகள் மாவீரர் தினத்தை அனுஷ்ட்டித்துள்ளனர்.

கொழும்பில்….

யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் கொழும்பில் உள்ள தனது இல்லத்தில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.அதேபோல், பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் கொழும்பில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார்.

யாழ்ப்பாணத்தில்…

பருத்தித்துறையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது.பருத்தித்துறை முனை பகுதியில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு சொந்தமான பூர்வீக காணியில் இந்த அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது. அதேபோல்,வல்வெட்டித்துறை தேருவில் ரேவடி கடற்கரை பகுதியில் வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்கள் எம்.கே.சிவாஜிலிங்கம்,அனந்தி சசிதரன் ஆகியோரின் தலைமையில் பெரும்திரளான மக்களின் பங்குபற்றலுடன் நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்ட்டிக்கப்பட்டது.

யாழ். பல்கலையில்…

யாழ். பல்கலைக்கழகத்தில் நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்ட்டிக்கப்பட்டது.பல்கலைக்கழக மாணவர்களால் தீபம் ஏற்றி இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

முல்லைத்தீவில்…

முல்லைத்தீவு கடற்கரையில் பொது மக்கள் ஒன்றுகூடி இறந்த இறந்தவர்களுக்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. அதேபோல்,முல்லைத்தீவு – அளம்பில் பகுதியில், வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் உயிர்நீத்த உறவுகளுக்காக சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார்.

மன்னாரில்…

நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தனது அலுவலகத்தில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார்.இந்த அஞ்சலி நிகழ்வில் உள்ளுராட்சி சபை உறுப்பினர்களும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.அதேபோல்,தமிழர் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ் சிவகரன் தலைமையில் நினைவஞ்சலி இடம் பெற்றது.இதன் போது அருட்தந்தை ஜெயபாலன் அடிகளார், மன்னார் நகர சபை தலைவர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன், மன்னார் நகரசபை உறுப்பினர் இரட்ணசிங்கம் குமரேஸ் உட்பட பலர் கலந்து கொண்டு மலர் தூவி தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

மட்டக்களப்பில்…

மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் தனது வீட்டில் இறந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினார்.அதேபோல்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் தனது இல்லத்தில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார்.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தன்னுடைய அம்பாறை இல்லத்தில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார்.

This slideshow requires JavaScript.