July 2, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘வரவு – செலவுத் திட்டத்தை சுதந்திரக் கட்சி ஆதரிக்குமா?’

வரவு – செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பின் போது அதனை ஆதரிப்பதா? இல்லையா என்பது குறித்து தீர்மானிக்கப்படவில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.

அடுத்தவாரம் நடைபெறவுள்ள கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் இது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

வரவு – செலவுத் திட்டத்தில் மக்களுக்கு எந்தவித நிவாரணமும் கிடைக்கப்பெறவில்லை, நாட்டில் அனைத்து பொருட்களினது விலைகள் தொடர்ந்து அதிகரிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஆளும் கட்சியில் உள்ள சிலர் தமது கட்சி உறுப்பினர்களை கட்சியை விட்டு வெளியேறும்படி பகிரங்கமாக தெரிவித்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

முக்கியமான தருணத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உரிய தீர்மானங்களை எடுக்கும் என கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச கூறினார்.