மாவீரர் நினைவேந்தல் தொடர்பான புகைப்படம் ஒன்றை பேஸ்புக்கில் பதிவிட்ட இளைஞர் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மன்னாரைச் சேர்ந்த இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பேஸ்புக்கில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டதாக தெரிவித்து, இளைஞர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.