![](https://i0.wp.com/tamilavani.com/wp-content/uploads/2021/11/257579952_5499243476773481_2724679752938480400_n-e1638017586973.jpg?fit=1024%2C691&ssl=1)
ஒமிக்ரோன் தொற்று அபாயம் காரணமாக இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி இரத்து செய்யப்பட்டுள்ளது.
ஆபிரிக்க நாடுகளில் நிலவும் புதிய கொரோனா வைரஸ் திரிபு பரவல் அச்சுறுத்தல் காரணமாக இந்தப் போட்டி இரத்து செய்யப்பட்டுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையிலான போட்டி சிம்பாப்வேயில் இன்று நடைபெற ஏற்பாடாகியிருந்தது.
சிம்பாப்வே உட்பட 6 ஆபிரிக்க நாடுகளில் ‘ஒமிக்ரோன்’ எனும் புதிய கொரோனா திரிவு பரவுகிறது.
மகளிர் உலகக் கிண்ணத்துக்கான தகுதி காண் போட்டி இரத்து செய்யப்பட்டதால், உலகக் கிண்ணத்தை நடத்துவதும் கேள்விக்குறியாகியுள்ளது.
இதுதொடர்பான தீர்மானத்தை ஐசிசி அறிவிக்கவுள்ளது.