May 19, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கிண்ணியாவில் ‘படகுப் பாதை’ கவிழ்ந்து விபத்து: 6 பேர் பலி!

திருகோணமலை, கிண்ணியா குறிஞ்சாக்கேணிப் பகுதியில் ‘படகுப் பாதை’ கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை இந்த சம்பவத்தில் சிக்கிய மேலும் 11 பேர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறிஞ்சாக்கேணிப் பால நிர்மாண வேலைகள் நடப்பதால், தற்காலிகமாக சேவையில் ஈடுபட்ட மோட்டார் இழுவைப் படகுடன் கூடிய படகுப் பாதையே இவ்வாறு விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

இந்த விபத்தின் போது, அந்தப் படகில் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை இதன்போது மேலும் சிலர் நீரில் மூழ்கி காணாமல் போயிருக்கலாம் என்றும், அவர்களை தேடி தேடுதல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

This slideshow requires JavaScript.