April 30, 2025 19:41:17

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”69 இலட்சம் மக்களின் நம்பிக்கையை பெற்ற ஜனாதிபதி பைத்தியக்காரனா?”

69 இலட்சம் மக்களின் நம்பிக்கையை பெற்ற ஜனாதிபதியை பைத்தியக்காரன் எனவும், சேர் பெயில் எனவும் கூறுவது நியாயமா? இது ஜனாதிபதியை அவமதிக்கும் செயற்பாடு மட்டுமல்ல, அவரது பிம்பத்தை சிதைக்க எடுக்கும் சதி, இதனை செய்ய வேண்டாம் என்கிறார் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க.

பாராளுமன்றத்தில், வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான இறுதிநாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பயங்கரவாத காலத்தில் கூட நாட்டில் சுற்றுலாத்துறை தடைப்படவில்லை.ஆனால் கொவிட் காலத்தில் முற்றுமுழுதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.எனினும் அதில் இருந்து மீண்டு வருகின்றோம்.நாட்டுக்கான சுற்றுலாத்துறையில் கட்டுப்பாடுகளை விதித்து நிலைமைகளை மீட்டெடுக்க முடியாது. எனவேதான் தடுப்பூசிகளை முழுமையாக வழங்கி நாட்டினை வழமைக்கு கொண்டுவர அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது என்றார்.

69 இலட்சம் மக்களின் நம்பிக்கையை பெற்ற ஜனாதிபதியை பைத்தியக்காரன் என கூறுகின்றனர். சேர் பெயில் என்கின்றனர். இது ஜனாதிபதியை அவமதிக்கும் செயற்பாடாகும்.இது நியாயமானதா என எதிர்க்கட்சியிடம் கேட்கின்றோம்.
நாட்டின் கொவிட் வைரஸ் பரவலை நாம் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கும் வேளையில் இவர்கள் கூட்டம் நடத்தி கொவிட் வைரஸை பரப்ப நினைக்கின்றனர்.இன்று மனோ கணேசனுக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளது.அவருடன் தொடர்புபட்ட பலருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.அவரிடம் இருந்து கொத்தணி உருவாகியுள்ளது.இவ்வாறான நிலையில் ஜனாதிபதியை அவமதித்து அவரது பிம்பத்தை சிதைக்கவே முயற்சிக்கின்றனர் என்றார்.