June 15, 2025 19:02:51

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யக் கோரி தலவாக்கலையில் ஆர்ப்பாட்டம்

ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து தருமாறு வலியுறுத்தி நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட தலவாக்கலை, வட்டகொட சிங்கள மகா வித்தியாலய மாணவர்களின் பெற்றோர் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.

பாடசாலைக்கு முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாணவர்களும் இணைந்துகொண்டுள்ளனர்.

தமது பாடசாலையில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து தருமாறு நுவரெலியா கல்விப் பணிமனைக்கு அறிவித்தும், இதுவரையில் தீர்வு கிடைக்கவில்லை என ஆர்ப்பாட்டகாரர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆங்கிலம், கணிதம் உள்ளிட்ட பிரதான பாடங்களைக் கற்பிக்க ஆசிரியர்கள் இல்லை எனவும் இதனால் பெரும்பாலான மாணவர்கள் பாடசாலையில் இருந்து இடைவிலகும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

பாடசாலைக்குத் தேவையான ஆசிரியர்களைப் பெற்றுத் தருவதாக அதிகாரிகள் எழுத்துமூலம் உறுதியளிக்கும் வரை போராட்டம் தொடரும் என ஆர்ப்பாட்டகாரர்கள் தெரிவித்துள்ளனர்.