![](https://i0.wp.com/tamilavani.com/wp-content/uploads/2021/11/P1-RICE_22022019_B05_CMY-e1637572137208.jpg?fit=409%2C288&ssl=1)
சாப்பாட்டுப் பார்சல் ஒன்றின் விலை 20 ரூபாவினால் அதிகரிக்கப்படுவதாக சிற்றூண்டிச்சாலை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், தேநீரின் விலை 5 ரூபாவினால் அதிகரிக்கப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
நாளை முதல் இந்த விலை அதிகரிப்புகள் அமுலுக்கு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
நாட்டில் சமையல் எரிவாயு, மரக்கறி வகைகள் உட்பட அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டதால் இவ்வாறு விலை அதிகரிக்கப்படுவதாக சிற்றூண்டிச்சாலை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.