July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சாப்பாட்டுப் பார்சல், தேநீரின் விலை அதிகரிக்கப்பட்டது

சாப்பாட்டுப் பார்சல் ஒன்றின் விலை 20 ரூபாவினால் அதிகரிக்கப்படுவதாக சிற்றூண்டிச்சாலை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், தேநீரின் விலை 5 ரூபாவினால் அதிகரிக்கப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

நாளை முதல் இந்த விலை அதிகரிப்புகள் அமுலுக்கு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

நாட்டில் சமையல் எரிவாயு, மரக்கறி வகைகள் உட்பட அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டதால் இவ்வாறு விலை அதிகரிக்கப்படுவதாக சிற்றூண்டிச்சாலை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.