July 2, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஊர்காவற்றுறையில் இராணுவத்தினரால் கிளைமோர் குண்டு மீட்பு

யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்கு உள்பட்ட வேலணை அம்பிகா நகர் பகுதியில் அதிசக்தி வாய்ந்த கிளைமோர் குண்டு ஒன்று புதைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

இராணுவப் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இராணுவத்தின் யாழ்ப்பாணம் 51ஆவது படைத்தளம் சிறப்புப் பிரிவினரினால் கிளைமோர்க் குண்டு மீட்கப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தயாரிப்பான “கொல்பவன் வெல்வான்” என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளதாகவும், இது யுத்தக் காலத்தில் புதைக்கப்பட்டதாக இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகின்றது.

மீட்கப்பட்ட குண்டு செயலிழக்கச் செய்துள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.