October 6, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தேசிய இளைஞர் விளையாட்டு விழா: கூடைப்பந்தாட்டத்தில் யாழ். மாவட்ட அணிகள் சம்பியன்

தேசிய இளைஞர் விளையாட்டு விழாவின் கூடைப்பந்தாட்ட போட்டியில் யாழ்ப்பாண மாவட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் சம்பியனாகின.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தால் நடாத்தப்படும் 33 ஆவது தேசிய விளையாட்டு நிகழ்வுகளின் கூடைப்பந்தாட்ட போட்டியானது யாழ். மாவட்டத்தில் நவம்பர் 17,18,19 ஆகிய தினங்களில் நடைபெற்றது.

இப் போட்டியில் யாழ்ப்பாண மாவட்டத்தின் ஆண்கள் அணியானது அரை இறுதியில் பலமிக்க கொழும்பு நகர்புற அணியை 72 க்கு 56 என்ற புள்ளி அடிப்படையில் வெற்றி கொண்டது.

தொடர்ந்து நடைபெற்ற இறுதிப் போட்டியில் கம்பஹா அணியை 72 க்கு 55 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றிகொண்டு சம்பியனாகியது.

இதனிடையே, பெண்கள் பிரிவில் அரை இறுதியில் கம்பஹா அணியை 36க்கு 18 புள்ளிகள் அடிப்படையில் வெற்றி கொண்ட யாழ்ப்பாண அணி, இறுதிப் போட்டியில் கொழும்பு நகர்புற பெண்கள் அணியை 43 க்கு 13 என்ற புள்ளி அடிப்படையில் இலகுவாக வீழ்த்தி யாழ்ப்பாண மாவட்ட பெண்கள் கூடைப்பந்தாட்ட அணி சம்பியனாகியது.

இதன்மூலம் யாழ்ப்பாண மாவட்ட பெண்கள் அணி தொடர்ச்சியாக இளைஞர் விளையாட்டு விழாவில் 6ஆவது தடவையாக சம்பியன் பட்டத்தை வென்றமை குறிப்பிடத்தக்கது.