May 24, 2025 19:33:02

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மன்னாரில் பெருந்தொகை டைனமைட் வெடிபொருட்கள் மீட்பு!

இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஒரு தொகை டைனமைட் வெடிபொருட்கள் மன்னார், சாந்திபுரம் பகுதியில் மீட்கப்பட்டுள்ளது.

கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலைத் தொடர்ந்து மன்னார் பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் தலைமையில் சென்ற பொலிஸ் குழுவினர் சாந்திபுரம் பகுதியில் வீடொன்றை சோதனையிட்டு வெடிபொருட்களை மீட்டுள்ளனர்.

இவ்வாறாக 998 கிலோ கிராம் எடையுள்ள வெடிபொருட்களை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக இப்பகுதிக்கு கடத்தி வரப்படுவதாக சந்தேகிக்கப்படும் இவை மீன் பிடிக்க பயன்படுத்தப்படும் வெடிபொருட்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தில் சாந்திபுரம் மற்றும் வங்காலை பகுதிகளைச் சேர்ந்த இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.