July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வடக்கில் பிரச்சனைகளை ஆராயும் ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செயலணி!

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ எனும் ஜனாதிபதி செயலணி, வடக்கு மாகாண மக்களின் பிரச்சனைகளை ஆராய்வதற்கு தீர்மானித்துள்ளது.

நேற்று முதல் இதற்கான விசேட வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அந்த செயலணியின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

இதன்படி நேற்றைய தினத்தில் வவுனியா மாவட்ட மக்கள் முகம்கொடுக்கும் பிரச்சனைகள் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்தக் கட்டமாக வடக்கின் மற்றைய மாவட்டங்களுக்கும் சென்று மக்களை சந்திக்கவுள்ளதாக ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.