July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘சமையல் எரிவாயு தட்டுப்பாடு இந்த வாரத்துடன் நிறைவுக்கு வரும்’: லிட்ரோ நிறுவனம்

இலங்கையில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு இந்த வாரத்துடன் நிறைவுக்கு வரும் என்று லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

லிட்ரோ எரிவாயு தட்டுப்பாட்டை முடிவுக்கு கொண்டுவரும் விதமாக 8 இலட்சம் லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களை சந்தைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் முதல் 7 இலட்சம் எரிவாயு சிலிண்டர்கள் சந்தைப்படுத்தப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் பணிப்பாளர் ஜானக பதிரத்ன தெரிவித்துள்ளார்.

மண்ணெண்ணெய் விலை அதிகரிப்பு மற்றும் விறகுத் தட்டுப்பாடு காரணமாக எரிவாயு பயன்பாடு அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அடுத்த ஆறு தினங்களில் எரிவாயு தட்டுப்பாடு நிறைவுக்கு வரும் என்று லிட்ரோ நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.