July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மன்னார் ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தின் பொதுச் சுடர் பீடம் இடித்தழிப்பு!

மன்னார், மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தின் பிரதான சுடர் ஏற்றும் பீடம், இனந்தெரியாதோரினால் இடித்தழிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதாக மாவீரர் துயிலும் இல்ல ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது.

பல வருடங்களாக இருந்த இந்த பொதுச்சுடர் ஏற்றும் பீடத்தை சற்றும் மனிதாபிமானம் இன்றி மிலேச்சத்தனமான முறையில் உடைத்து சேதப்படுத்தி உள்ளனர் என்று துயிலுமில்ல ஏற்பாட்டுக் குழுவின் ஏற்பாட்டாளரும் தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவருமாகிய வி.எஸ் சிவகரன் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் அங்குள்ள மக்கள் மத்தியில் மிகுந்த மன வேதனையை ஏற்படுத்தியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.