July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சிறைக்கூண்டில் இளைஞன் மரணம்: இரண்டு பொலிஸ் அதிகாரிகள் பணியில் இருந்து இடைநிறுத்தம்

பனாமுரே பொலிஸ் நிலையத்தின் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இளைஞர் ஒருவர் பொலிஸ் சிறைக்கூண்டில் உயிரிழந்த சம்பவத்தில் தொடர்புபட்ட குற்றச்சாட்டிலேயே இவர்கள் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

இளைஞனின் மரணம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க மூன்று பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பொலிஸ் தடுப்பில் இருந்த இளைஞர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, பிரதேச மக்கள் பொலிஸாருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.

குடும்ப தகராறு காரணமாக, மனைவியின் முறைப்பாட்டைத் தொடர்ந்து இளைஞன் கைது செய்யப்பட்டதாகவும், அவர் பொலிஸ் சிறைக்கூண்டில் தற்கொலைக்கு முயற்சித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைதியின் மரணத்துக்கு பொலிஸாரே காரணம் என்று பிரதேச மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.