July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையின் பொலிஸ் தலைமையகத்தின் பணிப்பாளராக முதலாவது பெண் நியமனம்!

இலங்கையின் பொலிஸ் தலைமையகத்தின் பணிப்பாளராக முதல் தடவையாக பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக தலைமையகம் அறிவித்துள்ளது.

இதன்படி, மகளிர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லங்கா ரஜினி அமரசேன, பொலிஸ் தலைமையகத்தில் புதிய பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இவர் இதற்கு முன்னர் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தில் உதவி பொலிஸ் அத்தியட்சகராக கடமையாற்றியுள்ளார்.

முன்னதாக இலங்கையில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் பதவிக்கு முதன் முறையாக பெண் ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தார்.

அத்தோடு,  ஒக்டோபர் மாதத்தில் மூன்று பெண் பொலிஸ் அதிகாரிகளுக்கு, பிரதிப் பொலிஸ்மா அதிபர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.