June 12, 2025 21:12:32

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

24 மில்லியன் பெறுமதியான போதைப்பொருளுடன் தலைமன்னாரில் மூவர் கைது!

24 மில்லியன் பெறுமதியான போதைப்பொருளுடன் தலைமன்னார் வெலிபர பிரதேசத்தில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பில் இந்த கைது இடம்பெற்றுள்ளது.

சந்தேகநபர்களிடம் இருந்து 3 கிலோ 100 கிராம் ‘ஐஸ்’ ரக போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்திய படகை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.