July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் மரக்கறி விலைகள் அதிகரித்தன!

இலங்கையின் பொருளாதார மத்திய நிலையங்களுக்கு குறைந்தளவான மரக்கறிகளே கொண்டு வரப்படுவதாக மரக்கறி வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதனால் நாட்டில் மரக்கறி விலைகள் பெருமளவில் அதிகரித்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

உர பிரச்சனை காரணமாக விளைச்சல் குறைவடைந்தமையே இந்த நிலைமைக்கு காரணம் என்று கூறப்படுகின்றது.

இதேவேளை எதிர்வரும் வாரங்களில் மரக்கறிக்கான தட்டுப்பாட்டு நிலைமை ஏற்படலாம் என்றும் மரக்கறி வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.