June 16, 2025 23:43:14

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மசகு எண்ணெய் இல்லாமையினால் சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டது!

மசகு எண்ணெய் இல்லாமையினால் இலங்கையின் சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று முதல் அந்த நிலையம் மூடப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மசகு எண்ணெய் இன்றி எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் மூடப்படும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

டிசம்பர் மாத நடுப்பகுதியிலேயே எண்ணெய் கப்பல் இலங்கைக்கு வரவுள்ளதாகவும், அது வரையில் எரிபொருள் சுத்திகரிப்புக்கு மசகு எண்ணெய் கைவசம் இல்லாமல் போயுள்ளதாகவும் பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் பொது ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.