February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை சந்தையில் தேங்காய்க்கு தட்டுப்பாடு!

இலங்கை சந்தையில் தற்போது தேங்காய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், இதையடுத்து தேங்காய் விலையில் பாரிய உயர்வு ஏற்பட்டுள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் இவ்வாறு தேங்காய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலையால்  பிரதேசங்களுக்கு இடையே போக்குவரத்து தடைப்பட்டமையே இதற்கு காரணம் என கூறப்படுகின்றது.

இந்நிலையில், கொழும்பு மாவட்டத்தில் தேங்காய் ஒன்று 100 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.