May 31, 2025 5:10:59

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொழும்பில் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு எதிர்க்கட்சிக்கு வழங்கப்பட்ட அனுமதி இரத்து!

ஐக்கிய மக்கள் சக்தி கொழும்பில் எதிர்வரும் 16 ஆம் திகதி நடத்தத் திட்டமிட்டிருந்த ஆர்ப்பாட்டத்துக்கு வழங்கப்பட்ட அனுமதி, இரத்து செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு மாநகர சபையின் பொது சுகாதார திணைக்களம் குறித்த அனுமதியை இரத்து செய்துள்ளது.

அரசாங்கத்தின் தோல்வி மற்றும் அடக்குமுறைகளுக்கு எதிராக பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தை நடத்த பிரதான எதிர்க்கட்சி தீர்மானித்திருந்தது.

பொதுமக்கள் ஒன்றுகூடல்களுக்கு அனுமதி வழங்கும் அதிகாரத்தை பொது சுகாதார அதிகாரிகளுக்கு வழங்கும் விதமாக கொவிட் தடுப்பு ஒழுங்குவிதிகள் மாற்றியமைக்கப்பட்டன.

கொழும்பில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையிலேயே, ஆர்ப்பாட்டத்துக்கான அனுமதி இரத்து செய்யப்பட்டுள்ளது.